2020இல் மீன்பிடித்துறையில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள்

255 0

2020ஆம் ஆண்டளவில் மீன்பிடித்துறையில் புதிதாக 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

2016 மற்றும் 2017ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்குள் எட்டாயிரத்து 562 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டதாக அமைச்சின் தேசிய நீரியல் உயிரின விருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டளவில் புதிதாக 50 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் விருத்தி செய்யப்படும் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment