அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் மோடி தலையிட்டதில் தவறு இல்லை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

186 0

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பிரதமர் ஆலோசனை கூறியதில் தவறு இல்லை என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் கமல்ஹாசன், புது கட்சி ஆரம்பிக்க போகிறேன் என கூறிவிட்டு, அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார். அவர் யாரை எதிர்த்து அரசியல் செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

ரஜினியும், கமலும் கட்சி தொடங்குவதால் அ.தி.மு.க. வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. புதிய கட்சிகள், சில நாட்களிலேயே காணாமல் போய்விடும். விஸ்வரூபம் படம் பிரச்சனையில், நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்ற கமல், அரசியல் பிரச்சனைகளில் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அ.தி.மு.க. அணிகள் இணைய பிரதமர் மோடி ஆலோசனை கூறியதில் தவறு இல்லை. ஒரு பெரிய இயக்கம் பிளவுபடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் பிரதமர் ஆலோசனை கூறி இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment