மைத்திரி – ரணில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவர் – வாசு

204 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவார்கள் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பலவீனம் காரணமாக சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்காலத்தில் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக பொய் நாடகம் ஒன்றே அரங்கேற்றம் செய்யப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment