கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கச்சத்தீவு செல்ல பெயர் பதிவு செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு அன்னியர் ஊடுருவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையாக இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நாளை மறுநாள் (21 ஆம் திகதி) முதல் 24 ஆம் திகதி வரை 4 நாட்கள் இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் இருந்து மீனவர்கள் நாட்டுப்படகுகள், விசைப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 நாட்களுக்கும் மீன்துறை சார்பில் படகுகளுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட மாட்டாது என்று மீன்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.