யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் சந்தியில் கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது (காணொளி)

382 0

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் சந்திப் பகுதியில் விசேட புலனாய்வு பிரிவினரால் கஞ்சாவுடன் காத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் சந்தியில் வைத்து 36 வயதுடைய நபர் ஒருவர் வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 4 கிலோ பெறுமதியுடைய இரு கஞ்சாப் பொதிகளை கைமாற்றுவதற்காக வைத்திருந்த வேளை விசேட புலனாய்வு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கோகிலாக்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும், கஞ்சாப் பொதிகளை மற்றுமொரு நபரிடம் கைமாற்றுவதற்காக காத்திருந்த வேளையில் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகளின் பெறுமதி 5 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment