ஆட்சியமைக்க கூட்டணி ஆதரவளிக்காது – ஆனந்தசங்கரி

207 0

வடக்கு உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆட்சியமைப்பதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு வழங்காது” என்று அந்தக் கட்சியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

“”தமிழினத்தின் அழிவுக்கு காரணமானவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 2004ஆம் ஆண்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த இவர்களால் ஜனநாயகம் பற்றி எப்படிப் பேசமுடிகின்றது. இந்தத் தேர்தலில் வடக்கில் 2 சபைகளை மட்டும் அதுவும் அறுதிப்பெரும்பான்மையின்றி வென்றுவிட்டு வீரம் பேசுகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment