ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் புதிய பிரதமர் ஒருவரின் கீழ் அரசாங்கமொன்றை அமைக்குமாயின் அதற்கு ஆதரவு வழங்க கூட்டு எதிர்க் கட்சி தீர்மானித்துள்ளதாக மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திலுள்ள ஸ்ரீ ல.சு.க.யின் உறுப்பினர்களில் கூடுதலான ஆதரவு பெற்ற ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.