ஐ.தே.கட்சிக்கு எதிராக செயற்பட விரும்பும் MP க்கள் எம்முடன் சேரலாம்- டளஸ் அழைப்பு

202 0

மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் வாக்களித்தது அரசாங்கமொன்றை நோக்கிச் செல்வதற்கு அல்ல எனவும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கமொன்றைக்  கொண்டுவருவதற்கே ஆகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சதிகளைச் செய்து தலைகளை மாற்றி, எமது அனுபவத்தில் கண்டதுபோல தவளைகளைச் சேர்த்துக் கொண்டு அரசாங்கமொன்றை உருவாக்கிக் கொள்ள தாம் ஒருபோதும் தயாரில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு பங்காளியாக வருவதற்கு விரும்புபவர்கள் எம்முடன் இணைந்து கொள்ள இன்னும் அவகாசம் இருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையுடன் உள்ள எந்தவொரு அமைப்பையும் இணைத்துக் கொண்டு பயணிக்க  தாம் ஒருபோதும் தயாரில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment