தமிழ்க் கட்சிகள், மக்களின் நலன்கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்று சேர்ந்து பயணிக்க முன்வர வேண்டும்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

283 0

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் கொள்கையளவில் ஒருமைப்பட்டுள்ள தமிழ்க் கட்சிகள், மக்களின் நலன்கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்று சேர்ந்து பயணிக்க முன்வர வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு  விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளியாகிய உள்@ராட்சி பெறுபேறுகளின் அடிப்படையில், தென்னிலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலiமையிலான பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் புதிய அரசியலமைப்ப உருவாக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களுக்கு அடிப்படையில் சம்ஸ்டித் தீர்வாவது கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடைய தமிழ்க் கட்சிகள் தமது கட்சியுடன் இணைந்து பயணிக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave a comment