பாராளுமன்றைக் கலைக்குமாறு மஹிந்த அதிரடி அறிவிப்பு !

230 0

பாராளுமன்றைக் கலைத்து விட்டு பொதுத் தேர்தலொன்றுக்கு சென்று உறுதியான அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும்மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உறுதியான அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு அரசாங்கம் உடனடியாக பாராளுமன்றைக் கலைத்துவிட்டு பொதுத்தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும். அதனைத்தான் மக்கள் எனக்கு வழங்கிய ஆணை தெளிவாக காட்டுகின்றது.

மக்கள் எனக்கு வழங்கிய ஆணையின்படி நான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைக்க எனக்கு விருப்பமில்லை.

தாமரை மொட்டுத் தான் எனது சின்னம். அந்த சின்னத்தின் கீழேயே எனது அடுத்த அரசியல் நகர்வுகள் அமையும்.

ஜனாதிபதியாக இருக்கும் போது நான் நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வாறு சேவை செய்தேனோ அத்தகைய சேவையையே இனியும் முன்னெடுப்பேன்.

அப்பம் சாப்பிட்டுவிட்டு பாய்ந்து சென்றதைப்போல் நான் இடியப்பம் சாப்பிட்டுவிட்டு பாய்ந்துசெல்ல மாட்டேன்.

இதேவேளை, மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். ஆனால் பாராளுமன்றில் கூட்டு எதிர்க்கட்சியினருக்கு மக்கள் தொடர்புடைய பிரச்சினைகளை பேசுவதற்கு வழங்கப்பட்டுள்ள நேரம் குறைவானது. எதிர்காலத்தில் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றில் பேசுவதற்குரிய நேரகாலத்தை அதிகரிக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் நேற்று இர­வு­வரை வெளி­யான முடி­வு­க­ளின்­படி முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன  மொத்­த­மாக 4621652 வாக்­கு­களை பெற்று  225 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்றி  அமோ­க­வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. அத்­துடன் அனைத்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளிலும்     ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன 3210 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது.  அதா­வது நேற்று இரவுவரை வெளியான  முடிவுகள் பிரகாரம் 45.01   வீத­மான வாக்­கு­களை    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்­றுக்­கொண்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment