சர்வதேச பொலிஸாரின் அனுமதியுடன் தான் விடுதலை செய்யப்பட்டதாக உதயங்க வீரதுங்க அறிவிப்பு

909 0

சர்வதேச பொலிஸாரின் அனுமதியுடன் தான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

கடந்த 4ஆம் திகதி அமெரிக்காவுக்கு பயணமாகும் போது டுபாய் விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு சர்வதேச பொலிஸாரால் நிறுத்தப்பட்டு, விசாரணைகளை மேற்கொண்டு, சர்வதேச ரீதியான குற்றச்சாட்டு இல்லை எனவும், சர்வதேச சிவப்பு பிடியாணை இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டேன். எனத் தெரிவித்துள்ளார்.

Leave a comment