ஸ்ரீமாவினுடைய குடியுரிமையை நீக்கியதைப் போன்று இலகுவாக என்னுடைய குடியுரிமையை நீக்க முடியாது!

223 0

ஸ்ரீமாவினுடைய  குடியுரிமையை நீக்கியதைப் போன்று அவ்வளவு இலகுவாக என்னுடைய குடியுரிமையை நீக்க முடியாது. முடிந்தால் என்னுடைய குடியுரிமையை நீக்கிக் காட்டுமாறு ரணிலுக்கு நான் பகிரங்க சவால் விடுகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்களாகியும் நாட்டின் எந்த பகுதியிலும் இது வரையிலும் எந்தவிதமான அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனதுஅரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போது ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் இன்னும் பூர்த்தியாகவில்லை. சில வேலைத்திட்டங்களை அப்படியே நிறுத்திவிட்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் நேற்று   இடம்பெற்ற தேர்தல் பிரசார கூடத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment