தல பூட்டுவா” கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

240 0

கல்கமுவே “தல பூட்டுவா” யானையை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் மஹவை மேலதிக நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் ரசிக மல்லவாரச்சி மூலம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 8 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களில் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன் ஏனையவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment