புதன்­கி­ழமை நள்­ளி­ர­வுடன் பிர­சார பணிகள் நிறைவு

254 0

எதிர்­வரும்  உள்­ளூ­ராட்­சி­மன்றத்  தேர்­த­லுக்­கான  பிர­சார பணிகள் யாவும்  நாளை மறு­தினம் புதன்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­முதல் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் பிர­தான அர­சியல் கட்­சி­களின் இறுதிக் கட்ட பிர­சாரப் பணிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. தேர்­த­லுக்கு இன்னும் ஒரு­சில தினங்­களே எஞ்­சி­யுள்ள நிலையில் பிர­தான கட்­சிகள் கடும் பிர­சார செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளன.

அந்த வகையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் இறுதிப் பிர­சாரக் கூட்டம் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ள­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் இறுதிப் பிர­சாரக் கூட்டம் பொல­ன­று­வையில் நடை­பெ­ற­வுள்­ளது.

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின்     இறுதி தேர்தல் பிர­சாரக் கூட்டம்  ஹோமா­க­மவில் நடை­பெ­ற­வுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ ஆகியோர் வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட நாட்டின் அனைத்து பகு­தி­க­ளிலும் கடும் பிர­சாரப் பணி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் மனோ­ க­ணேசன், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் ஆறு­முகன் தொண்­டமான், முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்­ளிட்ட அனைத்து அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் தீவிரப் பிர­சாரப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் 10 ஆம் திகதி சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள நிலையில் தேர்தல் விதி­முறைப்படி நாளை மறு­தினம் 07 ஆம் திகதி நள்­ளி­ரவு 12 மணி­யுடன் தேர்தல் பிர­சாரப் பணிகள் அனைத்தும் முடி­வுக்கு வர­வேண்டும்.

இம்­முறை உள்­ளூ­ராட்­சி­மன்ற  தேர்­த­லா­னது   கலப்பு முறை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது.   அதா­வது தொகுதி மூலம் 60 வீத­மான உறுப்­பி­னர்­களும்    விகி­தா­சாரம் மூலம் 40 வீத­மான உறுப்­பி­னர்­களும்     உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில்  தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்.    மேலும் விருப்பு வாக்கு முறைமை  இந்த தேர்தல் முறையில் இல்லை என்­ப­துடன்    பெண்­க­ளுக்­கான  இட­ஓ­துக்­கீடு    25 வீத­மாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது.

தேர்­தலில்  50 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட  வேட்­பா­ளர்கள் அர­சியல் கட்­சிகள் மற்றும்   சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக  கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

தற்­போ­தைய நிலை­மையில் நாட்டில் 341 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு எண்­ணா­யி­ரத்து முன்­னூற்று ஐம்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

மொத்­த­மாக இரு­நூற்று எழு­பத்­தாறு பிர­தேச சபை­களும், 24 மாந­கர சபை­களும், நாற்­பத்­தொரு நக­ர­ச­பை­க­ளு­மாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில்    புதிய  தேர்தல் முறைப்­படி இம்­முறை  உள்­ளூ­ராட்­சி­மன்ற  தேர்தல்  நடை­பெ­ற­வுள்­ளது. எதிர்­வரும் 10 ஆம் திகதி சனிக்­கி­ழமை  நாட­ளா­விய ரீதியில் உள்­ளூ­ராட்­சி­மன்ற  தேர்தல் வாக்­க­ளிப்பு நடை­பெறும்.  சனிக்­கி­ழமை காலை  ஏழு மணிமுதல்  மாலை    4  மணிவரை    தேர்தல் வாக்களிப்பு நடைபெறும்.

இறுதியாக விகிதாசார முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாட்டில் 335 உள்ளூராட்சி மன்றங்கள் இருந்ததுடன் அம்மன்றங்களுக்கு நான்காயிரத்து நானூற்று எண்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

Leave a comment