வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணம்- பிரேத பரிசோதனை அறிக்கை

272 0

பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் மரணத்துக்கான காரணம் யானை தாக்கியதானால் ஏற்பட்ட விலா எலும்பு முறிவின் வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பு என பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

தேரரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை களுபோவில தெற்கு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் கடந்த (03) ஆம் திகதி பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

யானை தாக்கியதனால் தேரரின் 9 விலா எலும்புகள் உடைந்திருந்ததாகவும் பரிசோதனையின் போது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 02 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, தேரர் களுபோவில வைத்தியசாலைக்கும் பின்னர் தனியார் மருத்துவமனைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு சுமார் 10 மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பிரேத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment