சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது – மத்திய அரசு

246 0

சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என சசிகலா புஷ்பா எம்.பி.யின் கேள்விக்கு மத்திய இணைமந்திரி மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார்.

சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்காடு மொழியாக தமிழை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீண்ட காலமாக எதிர்பார்ப்பு உள்ளது. இதனை வலியுறுத்தி கடந்த 2006-ம் ஆண்டில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், சசிகலா புஷ்பா எம்.பி இது தொடர்பான கேள்வியை மாநிலங்களவையில் இன்று எழுப்பினார். இதற்கு, மத்திய சட்டத்துறை இணை மந்திரி சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

சசிகலா புஷ்பா (கோப்புப்படம்)

சென்னை ஐகோர்ட்டில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசிடம் இருந்து 2006-ம் ஆண்டு கோரிக்கை பெறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இந்த பரிந்துரையை ஏற்கமுடியாது என சுப்ரீம் கோர்ட் அனைத்து நீதிபதிகள் அமர்வு 11-10-2012 அன்று அறிவித்தது.

கடந்த 1997 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் இதே போன்ற கோரிக்கை எழுந்த போது அதனை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இதனால், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment