போதைப்பொருளுடன் பெண் கைது

253 0

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் பொரளை லெஸ்லி ரணகள பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கைது செய்யப்பட வேளையில் அவரிடமிருந்து 26கிராம் 230மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a comment