பிரிட்டிஷ் அரசகுடும்பத்தை வரவேற்கும் ஆவணம் போலியானது

350 0

இலங்கை வந்துள்ள பிரிட்டிஷ் அரச குடும்ப உறுப்பினர்களை வரவேற்கும் குழு என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் வழிகாட்டல்கள் அடங்கிய ஆவணம் போலியானது என இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் இளவரசர் எட்வேட் மற்றும் இளவரசி உள்ளிட்டோர் இலங்கையின் 70 ஆவது சுதந்திர வைபவத்தில் விசேட அதிதியாக கலந்துகொள்ள கடந்த புதன்கிழமை இலங்கை வந்துள்ளதுடன் அவர்கள் இங்கு 5 நாட்கள் தங்கியிருக்கவுள்ளனர்.

இதேவேளை இலங்கை வந்துள்ள அரச குடும்பத்தை வரவேற்கும் முறைகள் தொடர்பிலான குழு ஆவணம் பொய்யானது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment