விவாதம் தேர்தலுக்கு முன்னரா ? பின்னரா ? ; நாளை கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம்

220 0

கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் நாளை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பு பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் மேலும் அறிவித்துள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு பாராளுமன்றித்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் விவாதத்தை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment