தலைமன்னாரில் 12 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

216 0

தங்கக்கடத்தலில் ஈடுபட்ட இரு இலங்கையர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.குறித்த இருவரும் தலைமன்னர் பகுதியிலுள்ள உறுமலை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 70 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 12 கிலோ கிராம் தங்கத்தை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a comment