பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா, இல்லையா?

398 0

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா, இல்லையா? என்பது பற்றி 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய  7 பேரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு 2016-ம் ஆண்டு தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால், மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா? இல்லையா? என்பது தொடர்பாக மத்திய அரசு 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

Leave a comment