அனுமதியின்றி ஒருதொகை சங்குகளை வைத்திருந்தவர் கைது

297 0

தங்காலை நகருக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, உரிய அனுமதியின்றி ஒருதொகை சங்குகளை தன்னகத்தே வைத்திருந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர் உரிய அனுமதியின்றி பல்வேறு வகையான சங்குகளை தனது வீட்டில் வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட நபர் வன ஜீவராசிகள் காரியாலய அதிகாரிகளால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a comment