3 வருடத்தில் நாளாந்த செலவு 3 பில்லியன் ரூபாய்

411 0

தற்போதைய அரசாங்கம் கடந்த 3 வருடத்திற்குள் 3000 பில்லியன் ரூபாய் கடனைப் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாளொன்றிட்கு 3 பில்லியன் ரூபாவை அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளதாக தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே நாமல் இதனைப் பதிவிட்டுள்ளார்.

மஹிந்தவின் 9 வருட ஆட்சிக்காலத்தில் மொத்தமாகப் பெறப்பட்ட கடன் தொகை 5200 பில்லியன் ரூபாய்கள் என்றும்,குறித்த நிதி யுத்தம் மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டதென்றும், தற்போதைய அரசாங்கம் பெற்றுக்கொண்ட நிதியில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லையென நாமல் பதிவிட்டுள்ளார்.

Leave a comment