பிணைமுறி அறிக்கை திரிவுபடுத்தப்பட்டுள்ளது -ரவி கருணாநாயக்க!

13933 0

மத்தியவங்கியின் பிணைமுறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை திரிவுபடுத்தி, இந்த அரசாங்கம் செய்துள்ள அநியாயாத்தை மக்களுக்கு நாளை தெரியப்படுத்தவுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு வடக்கில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்;த ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்த எஸ்.பி.திசாநாயக்க, தயாசிறி ஜயசேகர, டிலான் பெரேரா, ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த அமரவீர ஆகியோர் தற்போது அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியை விமர்சித்து வருகின்றனர்.

அது மாத்திரமின்ற நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அர்ப்பணித்த எங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

பிணைமுறி மோசடி குறித்த விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. ஆனால், அறிக்கையில் உள்ளவை முழுமையாக திரிவுபடுத்தப்பட்டே வெளியே கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதில் உள்ள உண்மைத் தன்மையை விசேட உரையொன்றை ஆற்றி அதன்மூலம் வெளியிடவுள்ளேன்” என்றார்.

Leave a comment