யாழ்.போதனா வைத்தியசாலையில் மத­கு­ருக்­கள், துற­வி­க­ளுக்கு சிறப்பு ஏற்­பா­டுகளை­ மேற்­கொள்­ளக் கோரிக்கை!!

246 0

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சாலை வெளி­நோ­யா­ளர் பிரி­வில் சிகிச்சை பெறச் செல்­லும் மத­கு­ருக்­கள், துற­வி­க­ளுக்­கென சிறப்பு ஏற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்தி விரைந்து சிகிச்சை வழங்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பாண மறை மாவட்ட பொது நிலை­யி­னர் கழ­கம் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சாலை பணிப்­பா­ள­ரி­டம் கடித மூலம் இவ்­வாறு கோரி­யுள்­ளது. அந்­தக் கடி­தத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சாலை வெளி­நோ­யா­ளர் பிரிவு தற்­போது சிறப்­பாக இயங்கி வரு­வ­தை­யிட்டு நன்றி தெரி­வித்­துக் கொள்­கின்­றோம். எனி­னும், குறித்த பிரி­வுக்கு சிகிச்சை பெற­வ­ரும் மத­கு­ருக்­கள்இ துற­வி­கள் பெரு­ம­ளவு நோயா­ளி­க­ளு­டன் இணைந்து காத்­தி­ருந்து வரி­சை­யாக வந்து சிகிச்சை பெறு­வ­தைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

ஆன்­மீ­கப் பணி­யு­டன் மக்­கள் பணி­க­ளை­யும் முன்­னெ­டுத்­து­வ­ரும் மதத்­த­லை­வர்­கள் பல சிர­மங்­களை எதிர்­கொள்ள நேரி­டு­கின்­றது. எனவே, எதிர்­கா­லத்­தில் அவர்­க­ளுக்­கென்று தனி­யான பகு­தி­யையோ, அன்றி முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யிலோ சிகிச்­சை­களை வழங்க ஏற்­பாடு செய்து மத­கு­ருக்­க­ளின் நலன்­க­ளைப் பேணு­வ­தோடு அவர்­க­ளுக்­கு­ரிய மரி­யா­தையை வழங்­கும் மனி­தப் பண்­பை­யும் மேற்­கொள்ள வேண்­டு­மென யாழ்ப்­பாண மறை மாவட்ட பொது நிலை­யி­னர் கழ­கத்­தி­ன­ரா­கிய நாம் கேட்­டுக்­கொள்­கின்­றோம்  என குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரின் பிர­தி­கள் யாழ் மாவட்ட செய­லர் வடக்கு மாகாண சபை சுகா­தார அமைச்­சர் யாழ் ஆயர் ஆகி­யோ­ருக்­கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a comment