பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு என வெளியான செய்தி உண்மை இல்லை-நிதி அமைச்சு

689 0
கடந்த 18 ஆம் திகதி அமைச்சர் மங்கள சமரவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தக பொருட்கள் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாசிக்கருவாடு , செத்தல் மிளகாய் உள்ளிட்ட பலசரக்கு வகைகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக பொருட்களுக்கான வரியை நடைமுறைப்படுத்தும் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை மாத்திரமே வர்த்தமானி அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்பட்டது.

இதற்கமைவாக வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பொருட்கள் வரி அதிகரிக்கப்படமாட்டாது. அத்துடன் எதிர்வரும் 6 மாத காலப்பகுதிக்கு நிலவும் விலைகளுக்கு அமைய இந்த பொருட்களை நுகர்வோர் கொள்வனவு செய்யமுடியும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment