பிணை முறி, ஊழல் மோசடி பற்றிய ஆணைக்குழுக்களில் அறிக்கைகள் நாளை சபையில்

217 0

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகள், நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பான அறிக்கை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விஷேட கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு, இன்று காலை, சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

Leave a comment