நிராகரிக்கப்பட்ட​ வேட்புமனு தொடர்பான தீர்ப்பு 24ம் திகதி

230 0

மகரகம நகரசபை உட்பட 14 உள்ளூராட்சி சபைகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட​மைக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, எதிர்வரும் 24ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. 

குறித்த மனு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரீதிபத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரின் முன்னிலையில் நேற்று (19) விசாரணைக்கு வந்த போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன் போது சட்ட மா அதிபருக்கு பதிலாக மன்றில் ஆஜரான மேலதிக ​சொலிசிட்டர் ஜெனரல் அர்ஜுன ஒபேசேகர, மகரகம நகர சபைக்கு   பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று  (19) நிராகரிக்கப்பட்டதாக மன்றுக்கு சுட்டிக்காட்டினார்.

அதன்படி குறித்த தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு கொண்டு வந்து அது தொடர்பாக ஆராய்ந்த பின்னர் தீர்ப்பு வழங்குவது சிறந்தது என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாம் முடிவு செய்ததையடுத்தே குறித்த மனு, எதிர்வரும் 24ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

Leave a comment