ஒருவர் கொலை; மனைவியைும் மகனையும் கைது செய்த பொலிஸார்

204 0

களுத்துறை, பயாகலை, ஹல்கந்தவில பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

வீட்டில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

60 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவியும் மகனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பயாகலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment