மின்­சார சபையில் 200 கோடி ரூபா நிதி மோசடியா.?

203 0

மின்­சார சபை ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய ஊதிய உயர்வின் போது மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. மின்­சார சபையின் 200 கோடி ரூபா நிதி­யிலும் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. இதனை வெளிப்­ப­டுத்­தாமல் இருக்­கவே மின்­சார சபை பொறி­யி­ய­லா­ளர்­க­ளுக்கு சட்­ட­வி­ரோ­த­மாக ஊழிய உயர்வு வழங்­கப்­பட்­டது என இலங்கை மின்­சார சபை தொழில்­சங்க தலைவர் ரஞ்சன் ஜெயலால் தெரி­வித்தார்.

இலங்கை மின்­சார சபையின் ஊழி­யர்­களின்  ஊதிய உயர்­விற்­கான போராட்டம் மற்றும் வேலை­நி­றுத்தம் நேற்­றோடு இரண்­டா­வது நாளா­கவும் நடை­பெற்­றது. இதன் தொடர்ச்­சி­யாக பிர­தமர் மற்றும் மின்­வலு மற்றும் மீள்­புத்­தாக்க வலு­வூட்டல் அமைச்­ச­ருக்கும் இது தொடர்­பாக தமது மக­ஜரை கைய­ளிக்க இலங்கை மின்­சார சபையின் தொழி­லாளர் சங்கம் முனைந்­தி­ருந்­தது.

இதன் போது பிர­தமர் அலு­வ­லகம் வரை சென்று பிர­த­மரை சந்­திக்க முடி­யாமல் சென்­ற­மை­யினால் அவரின் செய­லா­ள­ரிடம் தமது மக­ஜரை கைய­ளித்­து­விட்டு வந்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

2014 ஆம் ஆண்டு முன்­னைய அர­சாங்கத்­தினால் வழங்­கப்­பட்ட ஊதிய உயர்வின்போது மோச­டிகள் இடம்­பெற்­றன. அது போல் மின்­சார சபை யின் நிதியில் 200 கோடி ரூபா நிதித் தொகை­யிலும் மோச­டிகள் இடம்­பெற்

றுள்­ளன. இவ்­வா­றான ஊழல் மோச­டி­களை மறைப்­பதற்காக கப்­ப­மாக செலுத்­தப்­பட்­டதே மின்­சார சபையின் பொறி­யி­ய­லா­ளர்­க­ளுக்கு 2014 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி வழங்­கப்­பட்ட ஊதிய உயர்­வாகும்.

முன்­னைய அர­சாங்­கத்தின் ஜனா­தி­பதி, பிர­தமர் , பொறுப்­பான அமைச்சர், மின்­சார சபை தலை­வர்கள் தற்­கால தலை­மைகள் அனை­வரும் இதன் பங்­கா­ளர்­க­ளே­யாவர். எனவே அனை­வரும் இது தொடர்பில் பொறுப்பு கூற வேண்­டி­ய­வர்­களே. அத­னுடன், எது எவ்­வா­றி­ருப்­பினும் இன்று கூடி­யுள்ள நாம் எமக்கு உரி­ய­வர்­க­ளி­ட­மி­ருந்து உரிய தீர்வு கிடைக்கும் வரையில் எமது பணிக­ளுக்கு திரும்ப போவது இல்லை.

மேலும் நேற்று நாம் எமது எதிர்ப்­பினை தெரி­வித்­தி­ருந் தோம். இதன்போது எமது ஊழி­யர்கள் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதி­ர­டி­ப்ப­டை­யி­னரால்  தாக்­கப்­பட்டு காயங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டனர். எனவே இதனை கண்­டித்தும் இன்றும் நாம் போராட்­டத்தில் ஈடு­பட்டோம்.

எமக்கு இது தொடர்­பான உரிய தீர்வு கிடைக்கும் வரையில் போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்லை. இன்று (நேற்று) சமா­தா­ன­மாக ‍எமது கோரிக்கை அடங்­கிய மக­ஜரினை வழங்கி விட்டு திரும்­ப­வுள்ளோம். ஆனால் அதற்கு உரிய தீர்வு கிடைக்­காத பட்­சத்தில் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி தேர்தல் பிரச்­சார பணிகள் நிறை­வுற்ற அன்று மீண்டும் நாடு­பூ­ரா­க­வு­மி­ருந்து கொழும்­பிற்கு வந்து பாரிய போராட்­டத்தில் ஈடு­ப­டுவோம் என்றார்.

நேற்று முன்­தினம் இடம்­பெற்ற எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் இலங்கை மின்­சார சபை ஊழி­யர்கள் சிலர் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் தாக்­கப்­பட்­ட­தாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரி­வித்து நேற்று காலை முதல் இலங்கை மின்­சார சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் போராட்டம் ஒன்­றினை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

தமது எதிர்ப்பை தெரி­வித்து ஆரம்­பிக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்தின் போது  கறுப்பு கொடி­யேற்றி ஊழல் மோச­டி­களை தடுத்­திடு, சம்­பள உயர்வு தா என்ற பதா­கை­க­ளுடன் இலங்கை மின்­சார சபைக்கும், அர­சாங்­கத்­திற்கும் எதிர்ப்பை தெரி­விக்கும் வண்ணம் கோஷம் எழுப்­பி­ய­வாறு காணப்­பட்­டனர்.

இதன் பின்னர் லேக்­கவுஸ் சுற்­று­ வட்டா­ரத்தில் இருந்து புறப்­பட்ட ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பேர­ணியாக சென்று கொழும்பு 07 இல் அமைந்­துள்ள பிர­தம அமைச்சர் அலு­வ­ல­கத்தின் முன் வந்­த­டைந்­தனர். பிர­தம அமைச்­சரின் அலு­வ­ல­கத்­திற்கு முன் வந்­த­டைந்த  இவர்கள் பிர­தமர் அலு­வ­ல­கத்­திற்கு எதிர்­ப்பு­றமாக வீதி­யோ­ர­மாக தரித்­தி­ருந்து கோஷம் எழுப்­பி­ய­வாறே காணப்­பட்­டனர். பின்னர் பொலி­ஸா­ருடன் கலந்­து­ரை­யாடி பிர­த­மரை சந்­தித்து தமது முறைப்­பாடு மற்றும் கோரிக்கை அடங்­கிய மகஜரை அவ­ரிடம் கைய­ளிக்கச் சென்றனர். ஆயினும் பிரதமரை சந்திக்க கிடைக்காமையினால் பிரதமரின் செயலாளரிடம் தமது முறைப் பாடு மற்றும் கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்து திரும்பினர்.

மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு பேரணியாக மின்வலு மற்றும் மீள் புத்தாக்க வலு அமைச்சுக்கும் சென்று அமைச்சருடன் இது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டு பின்னர் சமாதானமாக கலைந்துசென்றனர்.

Leave a comment