மஹிந்த தலைமறைவாகியுள்ளார் – ஐ.தே.க.

269 0

Untitled-1_copyதற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாடு குருநாகலில் நடைபெறவுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ மலேஷியாவிற்கு சென்று தலைமறைவாகியுள்ளார்.

இது மிகவும் வெட்கத்துக்குரிய நடவடிக்கையாகும். மஹிந்த ராஜபக்ஷ  இராஜதந்திர விஜயத்தை மேற்கொள்ளவில்லை.

கட்சி மாநாட்டை புறந்தள்ளிவிட்டு ஏன் மலேஷியா செல்ல வேண்டும்.

எனவே சுதந்திரக் கட்சியினர் மஹிந்த ராஜபக்ஷவின் குணங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் மைத்திரிபால சிறிசேன என்பவர் நாட்டின் ஜனாதிபதியாவார்.

அவரினால் மாநாட்டிற்கு கூட்டம் சேர்க்க முடியாதா? எதிர்க்கட்சியில் இருக்கும் போதுதானே கவலைப்பட வேண்டும். ஜனாதிபதி ஒருவரால் இலட்ச கணக்கில் கூட்டம் சேர்க்க முடியும்.

சுதந்திரக் கட்சி பெரும் பலவீனமாக இருப்பதாக நாம் நினைக்க கூடாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பெரும் மக்கள் கூட்டம் உள்ளது என்பதனை மாநாட்டில் பார்க்கலாம்.