இழுவைப்படகு மீன்பிடி தொடர்பான சட்டம் இன்னும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை(காணொளி)

5997 0

இழுவைப்படகு மீன்பிடியை அரசாங்கம் தடைசெய்வதாக அறிவித்திருந்த போதிலும், அது தொடர்பான சட்டம் இன்னும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வேலணை மேற்கு கிராமிய கடற்தொழில் சங்க பிரதிநிதி ஜோண்சன், தொண்டைமானாறு கடற்தொழில் சங்க பிரதிநிதி மற்றும் கிராமிய கடற்தொழில் சங்க பிரதிநிதி நாகராசா வர்ணகுலசிங்கம், கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தின் சமாசத் தலைவர் கனகசபை, தீவகம் வடக்கு ஊர்காவற்துறை கடற்தொழில் கிராமிய பிரதிநிதி சண்முகராசா, கடற்தொழில் சங்கத் தலைவர் தவச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்.

Leave a comment