எமது மக்களின் விடிவிற்காக நீதிகேட்டு பாரிசிலிருந்து யெனீவாவுக்கு தொடரூந்துப் பயணம்

5150 0

அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உபகட்டமைப்பு க்களினதும், புரட்சிகரமான தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்களை 2018ல் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓயாத புயலாக ஒடுக்கு முறையின் கோரத்தாண்டவம் விடுதலைப்பாதையில் எம்மைத்தள்ளி விட்டது. இன அழிப்பின் தாங்க முடியாத நெருக்குவாரங்களின் விளைவாக, நாம் ஒரு விதி செய்து கொண்டோம். எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கத் தீர்மானித்தோம். விடுதலை பெற்ற மனிதர்களாக வாழ்வதற்கு முடிவு செய்து கொண்டோம்.

விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாக தேர்ந்தெடுக்கவில்லை, வரலாறு தான் அதை எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது. சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்குவிட்டு வைக்கவில்லை. என்கின்ற – தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு தொடர்ந்து வலுச்சேர்ப்போம்.

எமக்கான நீதி வேண்டி தொடர்ந்து 25 வருடங்களுக்கு மேலாக சர்வதேசத்தின் கதவுகளை தமிழீழ மக்களாகிய நாம் தொடர்ந்து தட்டிய வண்ணமே உள்ளோம். உலக மூத்த மொழியான எம் உயிரிலும் மேலான தமிழ்மொழியை தமது நாட்டின் இரண்டாவது மொழியாக கனடா, அவுஸ்ரேலியா நாடும், அமெரிக்க நாட்டின் வெர்ஐpனியா மாநிலம் மற்றும் இன்று ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான யோர்யீயாவும் தமிழர் புத்தாண்டு தைத்திருநாளாம் 14ம் நாளினை 2018 இல் இருந்து தமிழர் திருநாளாக இத்தேசங்கள் தங்கள் பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்தியுள்ள இந்தவேளை, அந்த தமிழர்களுக்கு ஒரு தேசம் உண்டு, அவர்கள் வாழ்ந்த பாரம்பரிய வரலாறு கொண்ட மண் உண்டு. அந்த மண்ணினைப் பெற்றிட உயிர் விலை கொடுத்த தமிழீழ மக்கள் தொடர்ந்தும் தமக்கான நீதி கிடைத்திட வேண்டும் என்று அரசியல் சனநாயக வழியில் தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருப்பார்கள் என்பதை உணர்த்தும் ஓர் களமாக, மார்ச் 12ம் நாள் nஐனீவா ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் செயலகம் முன்பாக நடைபெறவுள்ள மாபெரும் நீதிக்கான பேரணியை ஓரணியில் நின்று வலுவாக்குவோம்.

ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை பேரவையின் 37 வது கூட்டத்தொடரில் மார்ச் மாதம் 21ம் நாள் சிறீலங்கா தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில் ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையாளர் செயிட் அல்சைன் சிறீலங்கா தொடர்பான தனது அதிருப்தியைத் தெரிவிப்பார் என்று அனைத்துத்தரப்பினாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை மறுதலிக்கும் வகையில் பெப்ரவரி 26ம் திகதி முதல் மார்ச் 23ம் திகதி வரை நடைபெறவுள்ள மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தலைமையில் உயர் மட்டக்குழுவினரும், சட்டமா அதிபரின் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொள்வதுடன் நல்லாட்சி அரசானது தமிழ் மக்களுக்கு பல்வேறு விடயங்களை செய்துள்ளது என்றும், சட்டமா திணைக்களத்தின் மூலம் நாட்டில் நீதி நிர்வாகம் சரியாகவே செய்யப்படுகின்றது என்பதை நிறுவிப்பதோடு சிறீலங்கா அரசானது மேலும் கால அவகாசத்தை பெற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டை எடுக்கவுள்ளதையே அரசியல் அவதானிகளின் தெரிவித்துள்ளனர்.

சர்வதேசத்தின் துணையுடனும், சிறீலங்காவுக்கு துணைபோகும் நாடுகளின் துணையுடன் தமிழீழ மக்களின் ஆயுதப்போராட்டம் அமைதியாக்கப்பட்டு ஒன்பது வருடங்களாகியும், சர்வதேசம் எதிர்பார்த்த எதையும் சிறீலங்காவில் இருந்த அரசோ, அல்லது நல்லாட்சி தருவோம் என்று கூறி பதவிக்கு வந்த மைத்திரி அரசோ சர்வதேசம் கொடுத்த காலஅவகாசத்தில் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயத்தில் எந்தவித முன்னேற்றத்தையும் அடையவில்லை என்பதையும், மாறாக தமிழர் வாழ்விடங்களில் புத்த கோவில்களை புதிது புதிதாக அமைப்பதையும், தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி, தமிழ் மக்களின் உணர்வை மதியாது செவிசாய்க்காது இன, மத நல்லிணக்கத்திற்கு பங்கத்தையும், வெறுப்புணர்வையும் ஏற்படுத்தி வருவதும், தமிழர் பூர்வீக வாழ்விடமான வடக்கு கிழக்கை பிரிப்பதிலும் முனைப்பு காட்டுவதிலும், வவுனியா பிரதேசத்தையும் தம்வசமாக்கும் கைங்கரியத்தையும் செய்யத் தொடங்கி விட்டதையும் இதற்கு பல தமிழ் தலைமைகள் கண்மூடியிருப்பதும் காலம் கடந்து ஞானம் பெற்றவர்களாக கருத்துக்கள் தெரிவிப்பதையும் நாம் நிகழ்கால விடயமாகப் பார்க்கின்றோம்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!
எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் திகதி nஐனீவா மனிதவுரிமைகள் செயலகத்திற்கு முன்பாக முருகதாசு திடலில் நடைபெறவுள்ள மாபொரும் நீதிக்கான பேரணியில் அனைத்துத் தமிழீழ மக்களும் கலந்து கொண்டு பின் வரும் விடயங்களையும் முன்வைத்து பலம்சேர்ப்போம் வாருங்கள்.

ஐக்கிய நாடுகள் சிறீலங்காவுக்கு எதிராக எடுத்த பிரேரணைகளுக்கு தமிழர்கள் நாம் தொடர்ந்து வலுச்சேர்ப்போம்.
•புலம்பெயர்ந்த தமிழர்களின் அனைத்து நாடுகளிலுள்ள அரசியல் ரீதியான செல்வாக்கினை உரிய முறையில் எமது நியாயத்தின் பக்கம் பயன்படுத்துவோம்.
•தமிழர்கள் எங்கள் புராதனம், வரலாறு, அதன் கண்டுபிடிப்புகளை எங்கள் பலமாக்குவோம்.
•தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசும் , அதன் கூலிப்படை செய்யும் அட்டூழியம், அநியாயத்தை யும் எமது நியாயத்தின் காரணமாக்குவோம்.
•சிங்கள அரசின் ஆபத்தான பொருளாதார நிலையும், அதனால் வெறுப்படையும் உலக வல்லரசுகளின் மனோ நிலையும், சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மன மாற்றமும் விரக்தி நிலையையும் எமக்கு சாதகமாக்கிக் கொள்வோம்.
•சொந்த வாழ்விட மண்ணை இழந்து, காணமல் ஆக்கப்பட்ட சொந்த உறவுகளைத்தேடி 300 நாட் களையும் தாண்டி சனநாய அரசியல் வழியில் பேராடும் எமது மக்களின் அபிலாசைகளை ஏறெடுத்தும் பார்க்காத சிங்கள பேரினவாதிகளினதும், அரசினதும் உண்மைத்தோற்றத்தை உலகிற்கு எடுத்துச்சொல்வோம்.
•70 வருடங்களாக எமது உரிமைகளை இழந்து நாம் வாழ்ந்து விட்டோம்.

எமக்கான சுயநிர்ணய உரிமையை கிடைக்க தொடர்ந்தும் ஓங்கிக் ஒன்றாய்க் குரல் கொடுப்போம்.
nஐனீவா மனிதவுரிமைகள் செயலகம் முன்பாக முருகதாசு திடலில் 12.03.2018 திங்கட்கிழமை 14.00 மணிக்கு நடைபெறும் மாபெரும் நீதிக்கான பேரணியில் பாரிசிலிருந்து வுபுஏ தொடரூந்து காலை 9.00 மணிக்கு புறப்பட்டு 12.30 மணிக்கு nஐனீவா சென்றடைந்து, பேரணியின் முடிவடைந்து பின் மாலை 18.00 புறப்பட்டு 21.30 மணிக்கு பாரிசினை வந்தடையவுள்ளது. காலத்தின் தேவையுணர்ந்து இளையவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளுவோம் வாருங்கள்.

‘ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ”

மேலதிக தொடர்புகளுக்கு :- உங்கள் பகுதிப்பிரதேசப் பொறுப்பாளர்கள், மற்றும் தமிழ்ச்சங்க பிரதிநிதிகள், தமிழ் மக்கள் பேரவை – 06 52 72 58 67 தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு – 06 62 84 66 06 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு. தொடர்புகளுக்கு : – 01 43 15 04 21.

Leave a comment