மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரித்திபத்மன் சூரசேன நியமனம்

260 0

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரித்திபத்மன் சூரசேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துக்கொண்டுள்ளார்.

இதுவரை அதன் தலைமை நீதிபதியாக செயற்பட்ட எல்.டீ.பீ.தெஹிதெனிய உயர்நீதிமன்றின் நீதிபதியொருவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பாரிய ஊழல்,மோசடி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவும், பிரித்திபத்மன் சூரசேன கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment