புதையல் தோண்டிய நால்வர் கைது

275 0

ஹசலக, உள்பதகம பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹசலக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பதுளை, உள்பதகம மற்றும் அரந்தலாவை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் ஹசலக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment