குழப்பத்தை தவிர்க்கவே விளக்கம் கோரினேன் !

221 0

எனது பதவிக்காலத்தில் உள்ள குழப்பத்தை தவிர்த்துக்கொள்ளும் நோக்குடனேயே உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அவ்விறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஏற்ப, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான இரு வேறு வகையான கருத்துக்கள் சட்டம், சிவில் மற்றும் அரசியல் துறைகளில் நிலவுகின்றன.

இதனால் ஏற்படக்கூடிய குழப்பத்தை தவிர்த்துக்கொள்ளும் நோக்குடன், ஜனாதிபதி தமது பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதி ஒருவருக்கு அவ்வாறு விளக்கம் கோருவதற்கான அதிகாரம் காணப்படுவதுடன், இதற்கு முன் பதவிவகித்த ஜனாதிபதிகளும் தமது பதவிக்காலம் தொடர்பாக இவ்வாறு உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தனர்.

இது ஜனநாயக ஆட்சியமைப்பின் அரசியலமைப்பில் காணப்படும் ஒரு விசேட அம்சமாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment