வனங்களை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

221 0

இவ்வருடத்தில் புதிதாக 1 இலட்சத்து 30 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் காடு வளர்க்கப்படும் என வன பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் அனுர சத்தரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வனப்பாதுகாப்பு கட்டளைகள் சட்டம் திருத்தியமைக்கப்படும் எனவும் தனியார் துறையினதும் மக்களினதும் ஆதரவு இந்த வேலைத்திட்டத்திற்குப் பெற்றுக் கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காடுகளை அழிப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தற்போது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 29.7 சதவீதமான பகுதி காடுகளாகும் எனவும் இந்த காடுகளின் எல்லைப்பகுதிகளை அடையாளமிட்டு அவற்றைப் பாதுகாப்பதற்கும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுமெனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment