வட்டக்கச்சியில் பெண் சடலமாக மீட்பு

321 0

_MG_0164கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டக்கச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வட்டக்கச்சி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சடலத்தை பார்வையிட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வட்டக்கச்சி காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்._MG_0159