இந்தியாவும் இலங்கையும் தமக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் கலந்துரையாடலை நடத்தியுள்ளன.
சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.ஜே அக்பரை சந்தித்த போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது இருவரும் பிராந்திய பிரச்சினைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடினர்.
இந்த நிலையில், இந்து சமுத்திர பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் சமாதானம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை இந்திய அமைச்சர் பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.