யாழ் – பல்கலைக்கழக முறுகல் – சிங்கள மாணவர்களை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

296 0

IMG_2397-1024x768யாழ்ப்பாண பல்கலைக்கழக முறுகல் தொடர்பில் நான்கு சிங்கள மாணவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி அவர்களை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான், கோப்பாய் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜீலை மாதம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இரண்டு தரப்பினருக்கிடையிலும் முறுகல் நிலை தோன்றியிருந்தது.

இந்தநிலையில், தமிழ் மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவர்கள் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

சிங்கள மாணவர்களுக்கு எதிராக தமிழ் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய நான்கு சிங்கள மாணவர்கள் நேற்று யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்மாணவர்கள் மீண்டும் மன்றில் முன்னிலைப்படுத்தப்படும் அதேதினத்தன்று சிங்கள மாணவர்களையும் முன்னிலைப்படுத்தவேண்டும் என்று சட்டத்தரணி விடுத்த வேண்டுகோளை ஏற்ற நீதிவான் அவர்களை 22ஆம் திகதியன்று முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.