விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

346 0

Sarathநாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக காவற்துறை நிதி மோசடி தவிர்ப்பு விசாரணை பிரிவில் முன்னிலையான போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பிலே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவிருந்தது.

இதேவேளை, நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பி.பீ ஜயசுந்தர இன்று முற்பகல் காவற்துறை நிதி மோசடி தவிர்ப்பு விசாரணை பிரிவில் முன்னிலையானார்.

இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்த போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் குறித்த பிரிவில் முன்னிலையானார்.