‘கொடுக்க மனம் உள்ளது, ஆனால் நிதியில்லை’: அமைச்சர் செங்கோட்டையன்

246 0

போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்க அரசுக்கு மனம் உள்ளது, ஆனால் போதிய நிதியில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே ஓடுவதால் அவற்றில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது.

மூன்றாவது நாளாக தொழிலாளர்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், தமிழக அரசு இறங்கி வர மறுக்கிறது. இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது. “ அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்க அரசுக்கு மனம் உள்ளது. ஆனால் நிதியில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment