இலங்கை அணிக்கான தலைவரை பயிற்றுவிப்பாளர் தீர்மானிப்பார்- தயாசிறி

40053 0

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை குறித்து அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்கவினால் தீர்மானிக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஹதுருசிங்க கலந்துரையாடியுள்ளதுடன், அவர் இது தொடர்பிலான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை அணி புதிய பயிற்றுவிப்பாளரின் கீழ் சிறந்த முறையில் பயிற்சி எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment