அடுத்தடுத்து இரு ஆணைக்குழு அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டதில் சந்தேகம்- கம்மம்பில

12104 0

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை ஒப்படைக்கப்பட்டு ஒரு சில நாட்களில் இன்னுமொரு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் ஒப்படைக்கப்பட்டுள்ளமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தூய ஹெல உறுமய தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.

வேறு ஆணைக்குழு அறிக்கையை வெளியிட்டு மத்திய வங்கியின் முறி தொடர்பிலான ஆணைக்குழு அறிக்கையை  மூடிமறைக்க இடமளிக்கப் போவதில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 17 பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையும்  ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment