திவுலப்பிட்டிய முன்னாள் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

19566 0

திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய முன்னாள் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017 ஒக்டோபர் 4ம் திகதி பொலிஸ் காவலில் இருந்த போது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவுப்படி நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் கடந்த ஒக்டோபர் 03ம் திகதி மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment