சிறுத்தையிடமிருந்து தப்பிய தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

75712 0
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் பன்முா் தோட்ட பகுதியில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சிறுத்தை தாக்கியதில் ஐந்து தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்திசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.20 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நான்கு ஆண் தொழிலாளர்களும் ஒரு பெண் தொழிலாளியும் இவ்வாறு சிறுத்தை தாக்குலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தனர்.

தேயிலை மலையில் பதிங்கியுருந்த சிறுத்தையை ஒருவர் தாக்க முற்பட்டபோதே சிறுத்தை மீண்டும் தொழிலாளர்களை தாக்கியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை தோட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி சிறுத்தையை மடக்கிபிடித்துள்ளதுடன், சிறுத்தையை வனவிலங்கு காரியாலயத்திற்கு ஒப்படைப்படற்கான நடவடிக்கைகளை ஹட்டன் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment