ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

268 0

பாரிய மோசடி, ஊழல், அரச வளங்கள், அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியின் செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

1,135 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையினை ஆணைக்குழுவின் தலைவர் பி. பத்மன் சூரசேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஆஸ்டின் பெர்னாண்டோ மற்றும் செயளாலர் எச்.டபிள்யூ. குணதாச உட்பட ஏனைய உறுப்பினர்களான விக்கும் களுரச்சி, ஆர். ரணசிங்க, கிஹான் குலதுங்க, பி.ஏ.பிரேமதிலக ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a comment