தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கடந்த மாதம் 4ம் திகதி வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட ஊடக நெறிமுறைகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திட்டுள்ளார்.
இந்த நிகழ்வு அலரிமாளிகையில் இன்று காலை இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசியல் அமைப்பின் படி நியாயமான பக்கச்சார்பற்ற தேர்தலை நடத்துவது இந்த ஊடக நெறிமுறைகளின் நோக்கமாகும்.
ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ள இந்த நெறிமுறைகளுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதும் அது சட்டபூர்வமாகிவிடும்.
இந்த ஊடக நெறிமுறைகளுக்கு கட்டுப்படுவது அனைத்து ஊடகங்களினதும் பொறுப்பும், கடமையுமாகும்.
இது நல்லாட்சியின் மற்றுமொரு வெற்றியாகும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

