காசல்ரீ நீர்தேக்கத்தில் பெண் சடலமாக கண்டெடுப்பு

256 0

நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலமொன்றை நோட்டன் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். 

காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுந்தரலிங்கம் சிவகுமாரி என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

திருமணம் முடித்து ருவன்புர பகுதியில் வசித்து வந்த குறித்த பெண், தாய் வீட்டிற்கு வந்திருந்த நிலையிலே நீர்த்தேக்கத்தின் கரையோர பகுதியில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நோயினால் பாதிக்கப்படிருந்த குறித்த பெண்ணிண் பாதனிகள் நீர்தேக்கத்தின் கரையோரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது

சடல்த்தை ஹட்டன் மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனைக்கு நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்தாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment