அடிமட்ட மக்களின் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் தேர்தல் முறை- மாவை

4776 0

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வட்டார முறையிலான தேர்தல், அடிமட்ட மக்கள் மத்தியில் அபிவிருத்தியை உறுதிப்படுத்தக்கூடியதாக அமையும் என தழிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு இன்று (29) யாழ். நல்லூர் பகுதியில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை 25 வீதமான பெண்கள் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட வேண்டியது கட்டாயமானதுடன், தற்போது பெண்களின் பங்களிப்பு சமூகத்திற்கு அவசியம் எனும் வகையில் தேர்தலிகளில் பெண்களின் விகிதாசாரம் அதிகரிக்கப்பட வேண்டும் தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது கட்சிகளின் கொள்கைகள் நிலைப்பாடுகள் தொடர்பாக மக்களின் வீடு வீடாகச் சென்று பிரச்சாரங்களை மேற்கொள்ளாது போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொந்த தகுதி நிலைகள், கல்வி, அனுபவம் என்வற்றை குறிப்பிட்டு எவ்வாறு மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பது தொடர்பான விளக்கங்களை கூற முடியும் என்றார்.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தரமலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன் தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment